இடுகைகள்

சித்திரக்கதை

படம்
  நிலாமுற்றம் கதைக்களம் சித்திரக்கதை பதிவு எண்..2961 14.8.2021 இன்னா செய்தாரை... ஐந்தாவது படிக்கும் குமாரிக்கு மறுநாள் காலாண்டு பரீட்சை. படிப்பதற்கு நிறைய இருந்தது. அவள் அம்மா கண்ணாயி நான்கு வீடுகளில் வேலை செய்கிறாள்.தன் வீட்டு வேலை செய்ய நேரமில்லை. குமாரிதான் காலை எழுந்து வாசல் தெளிப்பதிலிருந்து சமையல் உட்பட அத்தனை வேலைகளும் செய்வாள். கண்ணாயிக்கு திருமணமாகி இசக்கிமுத்துவுடன் குடித்தனம் நடத்திய நாட்களில் மிக நல்லவனாக அன்போடும் காதலோடும்தான் இருந்தான். அதன் அடையாளமாக பிறந்தவளே குமாரி. இடையில் ஏற்பட்ட குடிப்பழக்கம் அவனை வேறு மனிதனாக மாற்றியது. தடுத்த கண்ணாயி அவனுக்கு எதிரியாகத் தெரிய, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவளுடன் வாழத் தொடங்கினான். எத்தனையோ பேர் கண்ணாயி சார்பாக அவனிடம் பேசியும் மாறாத இசக்கியை விலக்கிவிட்டு மகளுடன் தனியாக வாழத் தொடங்கினாள் கண்ணாயி.இசக்கியின் குணம் பற்றி அறிந்த குமாரி தான் பெரியவளானதும் அம்மாவை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணுவாள். குமாரிக்கு படிப்பு நன்றாக வந்தது. எதையும் ஒருமுறை படித்தால் அப்படியே மனனம் செய்யும் திறமை அவளுக்கு உண்

ஓடினாள்.. ஓடினாள்..

படம்
நிலாமுற்றம் கதைக்களம் சித்திரக்கதை 14.7.2021 ராதா பாலு எண்..2961 ஓடினாள்.. ஓடினாள்.. அமுதாவுக்கும் மாரி முத்துவுக்கும் திருமணமாகி மூன்று வருடங்களாகின்றன. குழந்தை குமுதாவுக்கு இரண்டு வயது. மாரி அந்த ஊர் மார்க்கெட்டில் கூலிவேலை செய்து வந்தான். அவனுக்கு கிடைத்த சம்பளத்தில் அமுதா குடித்தனம் செய்து வந்தாள். அவளும் பக்கத்தில் இரண்டு வீடுகளில் பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்ததில் கிடைத்த பணம் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. திடீரென்று வந்த கொரோனா எல்லார் வாழ்வையும் மாற்றியது போல் இவர்கள் வாழ்வையும் பாதித்தது. இருவருமே வேலைக்கு போக முடியாத நிலை. காய்கறிகளை வாங்கி வீடுகளுக்கு கொண்டு கொடுத்து மாரி சம்பாதித்ததில் ஓரளவு சாப்பிட முடிந்தது. இப்படி ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை மாரியின் கெட்ட சகவாசத்தால் தாறுமாறாகிப் போனது. வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வீட்டுக்கு தராமல் குடித்து அழித்தான். அமுதாவின் அழுகை அவனை பாதிக்கவில்லை. நாளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்பதே தினமும் அமுதாவின் கவலையாக இருந்தது. அன்று மாலை குடி போதையில் வந்த மாரி அவனுடன் இருந்தவர்களிடம் அமுதாவையே விலை பேசியதைக் கேட்டபோது கூனிக் குற

நாயின் பாசம்

படம்
  நுண்கதை எண்..2961 30.6.2021 நாயின் பாசம் சுரேஷும் சுனிதாவும் ரூபி என்ற நாயை மிக ஆசையுடன் வளர்த்து வந்தார்கள். பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களோடு விளையாடும்.  வெளியில் மாடிப்படி கீழேதான் படுத்திருக்கும். ரூபி சில மாதங்கள் முன்பு குட்டி போட்டபோது  அதிலிருந்த ஒரு ஆண் குட்டிக்கு ஜம்போ என்று பெயர் வைத்து வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் இவர்களிடம் ஒட்டிப் பழகியதோடு ரூபியுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று காலையிலிருந்து ரூபியையும் ஜம்போவையும் காணவில்லை. மாலை பள்ளியிலிருந்து வந்தபோது ஜம்போ மட்டுமே இருந்தது. முகம் வாடி வருத்தமாக இருந்தது.  இவர்களைப் பார்த்ததும் அழுவது போல் முனகிக் கொண்டே  சுரேஷின் பேண்டைப் பிடித்து கூட வரும்படி அழைத்து சென்றது.  இருவரும் ஒரு தண்ணீர் பாட்டில்,பிஸ்கட் பாக்கெட்டுடன் ஜம்போவுடன் சென்றார்கள்.  அடுத்த தெருவில்  சாலை ஓரத்தில் முனகியபடி ரூபி படுத்துக் கிடந்தது. சுரேஷ் அருகில் சென்று கூப்பிட்டு தடவினான்.  உடலெல்லாம் ரத்தம். காரில் அடிபட்டு‌ மூச்சு விட முடியாமல் தவித்தது. சுரேஷையும் சுனிதாவையும் பாதி மூடிய கண்களோடு அன்பொழுக

சித்திரக்கதை

படம்
  நிலாமுற்றம் கதைக்களம் சித்திரக்கதை 14.6.2021 எண்..2961 பிணைந்த கைகள் ஆட்டோவிலிருந்து அந்த ஆசிரம வாயிலில் இறங்கிய ஸாரா வேகமாக அறைக்குச் சென்று விட்டாள். அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந் தது. உள்ளேவந்தசெலினா ...என்னாச்சு ஸாரா? ஏன் அழுகிறாய்? பிரபு எங்கே? ஏதாவது பிரச்னையா?... என்றார். அவர் மடியில்  சரிந்தவள் துக்கம் தாங்காமல் அழுது விட்டாள். ஆங்கிலோஇந்தியப் பெண்ணான ஸாராவின் தாய்  இந்த ஆச்ரமத்தில் இருந்தவள், ஸாரா பிறந்த ஆறுமாதத்தில்  இறந்து விட்டாள். அதுமுதல் செலினாதான் அவளை வளர்த்து வருகிறாள்.  ஸாரா ஆசிரமத்திலேயே குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு கணக்குகளையும் பார்த்து வந்தாள். பிரபு ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறான். அவனுடைய அதிகாரியுடன் இந்த ஆசிரமத்துக்கு வந்தவன் மாதாமாதம்  ஒரு தொகையை ஆசிரமத்துக்கு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். சாராவின் அழகும் சுறுசுறுப்பும் அங்குள்ளோரிடம் அவள் காட்டும் பாசமும் நேசமும் பிடித்துப் போக அவளிடம் காதல் ஏற்பட்டது. ஆசிரமம் வரும்போதெல்லாம் தோட்டத்திலிருந்த ஒரு திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பிரபு அவளைத் திருமணம் செய்து கொள்வதா
படம்
  பழுத்த மரம் எண்..2961 7.6.2021 விடிகாலை எழுந்து பல் துலக்கி காபி குடித்துக் கொண்டு  தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் செங்கேணி. 'முன்னாள் முதலமைச்சர் பரிதிஇளம்மாறன் அவர்கள்தம் எழுபத்தெட்டாம் வயதில்  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அன்னாரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கட்சி மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலை தகனம் நடைபெறும்' என்ற செய்தி படத்துடன் ஒளிபரப்பாயிற்று. செங்கேணி செய்தியைக் கேட்டு..பரிதி. போயிட்டியாப்பா...என்று குரல் உயர்த்தி அழுதார். உள்ளிருந்து வந்த அவர் மனைவி காளியம்மா..என்னங்க என்னாச்சு? ஏன் அழறீங்க?..என்று கேட்க,..என் நல்ல நண்பன் பரிதி என்னைவிட சின்னவன் போயிட்டான்..என்று அழுதார். அவளும் செய்தியைக் கேட்டு பரிதாபப் பட்டாள். அடுத்த அரைமணியில் செங்கேணியின் கைபேசி ஒலிக்க அதை எடுத்தவனிடம் பரிதியின் மகன் குமரன்மாறன் பேசினான். ...பெரிப்பா. அப்பா நம்மை விட்டு போயிட்டார். நீங்கதான் அவருக்கு கட்டைகளைக் கொண்டு வந்து தகனம் செய்யணும்னு தன் ஆசையை என்கிட்ட சொன்னதோட உயிலும் எழுதி வெச்சிருக்காரு. நம்ம கட்சி ஆளுங்க கார் எடுத்துக்கிட்டு மதியம் வருவாங்க. நீங்க வந்துட

நுண்கதை

படம்
  நுண்கதை எண்..2961 29.4.2021 அன்னையர் தினம் அம்புஜத்திற்கு வயது எழுபது. மாதா மாதம் ரேஷன் கடையில்  வரிசையில் நின்று சாமான்களை  வாங்கிவர வேண்டியது அவள் வேலை. உடல் தள்ளாடும் வயதில் பசியுடன் நல்ல வெயிலில் நிற்பது எப்படி முடியும்? சாமான்களை வாங்கிப் போனால்தான் அவளுக்கு சாப்பாடு. முடியவில்லை என்றாலோ தண்டச்சோறு என்று மருமகள் வார்த்தைக ளாலேயே கொன்று விடுவாள்.  ஒரு காலத்தில் வசதியாக இருந்தவள்தான் அம்புஜம். அன்பான கணவர். ஒரே மகன். அவன் பிறந்த சில மாதங்களில் கணவர் இறந்துவிட, பிறந்த வீட்டார் உதவியுடன் தனியாக நின்று வளர்த்தாள். அவனோ பொறுப்பில்லாதவனாக வளர்ந்தான். படிப்பும் வராமல் பத்தாம் வகுப்புடன் நின்று விட்டான். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேன் வேலை. அவன் மனைவிக்கு கொடுத்த மரியாதையை தாய்க்கு கொடுக்கவில்லை. பெற்ற தாய் என்ற பரிவு கூட கிடையாது. இவள் முறை வந்து சாமான்கள் வாங்க இரண்டுமணி நேரமாயிற்று.  காலையில் குடித்த கஞ்சி எப்பவோ ஜீரணமாகி வயிறு கபகபவென்று பசித்தது.  போகும் வழியிலிருந்த ஆலயத்தில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் வரிசை. ஓய்ந்துபோய் நின்றவளின் அருகில் வந்த ஒரு ம

அம்மா அம்மாதான்! எண்..2961

படம்
அம்மா அம்மாதான்! எண்..2961 30.5.'21 அம்மா அம்மாதான்! ஊருக்கு போய் வந்தது முதல் தருண் மனம் அம்மாவின் நினைவிலேயே இருக்கிறது. சென்ற மாதம் அவன் தாத்தா பாட்டியின் சதாபிஷேகம். வீடு முழுதும் உறவுகள்.தருணின் அக்காவும் திருமணமாகி வெளிநாட்டு வாசம்.  ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தருணுக்கு  திருமணமாகவில்லை. அவன் அம்மாபிள்ளை.  சதாபிஷேகத்திற்கு உறவினர்கள் பலர் வந்திருந்ததால் வீட்டோடு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்திருந்தாள் அவன் அம்மா லட்சுமி. இன்றுதான் எல்லோரும் கிளம்பிச் சென்றபின் 'அப்பாடா' என்று சற்று கால் நீட்டி அமர்ந்தாள். தருண் வந்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான்.  'என்னடா வேண்டும்? நாலஞ்சு நாளா நல்ல சாப்பாடு சாப்பிட்டயா? அங்கதான் நீயே ஏதோ பண்ணி சாப்பிடறயே. ' 'அட போம்மா. நான் அதுக்காகவா வந்தேன். உன் கையால ஒரு  பூண்டுரசம்  சாதம் சாப்பிடணும்.அந்த ருசி எதில?' 'அட அசடே..அதான் டல்லா இருக்கியா? இதோ சாயந்திரமே பண்ணிப் போடறேண்டா'. 'அம்மா..கூடவே அந்த கத்தரிக்காய் ரசவாங்கியும் பண்ணிடு.'இது பெண் பூரணியின் ஆர்டர். அம்மாவின் கைமணத்துக்கு இணையேது?